ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள படம் எப்ஐஆர். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கவுதம் மேனன் நடித்துள்ளனர். நாளை(பிப்., 11) இந்த படம் வெளிவருகிறது.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இந்த படத்தை நல்ல லாபத்துக்கு விற்றதாகவும், படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் விஷ்ணு விஷால் தனது பேட்டியில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து படம் வியாபாரமான தொகை குறித்து வெவ்வேறு விதமான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.
இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் தெரிவித்திருப்பதாவது: எப்ஐஆர் வணிகம் பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. படம் வெளியீட்டுக்கு முன்பே தியேட்டர்கள் அல்லாத விற்பனையாக 22 கோடிக்கு விற்பனையானது மகிழ்ச்சியாக இருக்கிறேன். பார்வையாளர்களின் அன்பே இறுதி தீர்ப்பு என்கிறார்.