நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிம்பு நடித்த 'அன்பானவன், அடங்காதவன், அசராதவன்' படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிம்பு தலையீட்டால் தனக்கு 9 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு புகார் கொடுத்ததாக மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷாலை தனது வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.
தான் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இல்லை, சங்க நிர்வாகத்துக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று விஷால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விஷாலை நீக்குவதற்கு சிம்பு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தது.