நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமவில் இயக்குனர்களாக இருந்து நடிகர்களாக மாறியவர்கள் நிறைய பேர். அவர்களில் தற்போது தனது வித்தியாசமான நடிப்பால் பரபரப்பாகப் பேசப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த 'மாநாடு' படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. அவருடைய வசனங்கள் வீடியோ மீம்ஸ் செய்யும் அளவிற்கு பிரபலமானது.
'மாநாடு' வெற்றிக்குப் பிறகு அவரைத் தேடி பல புதிய படங்களின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 'டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சில படங்கள் இன்னும் வெளியாக வேண்டி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா. இப்படத்திற்காக அவருக்கு முன்பை விட அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் தகவல். 'மாநாடு' வெற்றிக்குப் பிறகு எஸ்ஜே சூர்யாவும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
இதனிடையே, தெலுங்குத் தயாரிப்பாளர் ஒருவர் எஸ்ஜே சூர்யாவை அவரது படம் ஒன்றில் வில்லனாக நடிக்க அணுகியதாகவும் ஏழு கோடி ரூபாயை எஸ்ஜே சூர்யா சம்பளமாகக் கேட்க அதிர்ச்சியுள்ள தயாரிப்பாளர் அமைதியாகச் சென்றதாகவும் தகவல் பரவி வருகிறது.