22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கேரளாவைச் சேர்ந்த பிரஜின், சின்னத்திரை தொடர்களில் பிரபலம். இது ஒரு காதல் கதை, பெண், அஞ்சலி, உள்பட பல தொடர்களில் நடித்தவர் அதன்பிறகு சினிமா பக்கம் போனார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் தீ குளிக்கும் பச்சை மரம் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.
அதன்பிறகு சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்க முடியவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்தவர், சின்னத்தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் தொடர்களில் நடித்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார், நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, பெயரிடப்படாத ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். இனி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தும் விதமாக வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து வெளியேறினார் பிரஜின்.
இந்த சீரியலில் பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். தற்போது இந்த தொடரில் பிரஜினுக்கு பதிலாக ராஜபார்வை தொடரில் நடித்த முன்னா நடிக்கிறார்.