சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இந்த படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா டான்டன், பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி பஸ்ருர் இசை அமைத்துள்ளார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கோலார் தங்க வயலின் பழங்கால பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாக பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளி போடப்பட்டது. தற்போது வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஹீரோ யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். படத்தின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு அனிகுடே ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.