பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இந்த படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா டான்டன், பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி பஸ்ருர் இசை அமைத்துள்ளார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கோலார் தங்க வயலின் பழங்கால பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாக பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளி போடப்பட்டது. தற்போது வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஹீரோ யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். படத்தின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பிறகு அனிகுடே ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.