ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தற்போதும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஆச்சார்யா படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. தற்போது போலோ சங்கர், லூசிபர் ரீ-மேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் நேற்றிரவு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி தான். வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.