ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி(90). தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 2020ல் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தில் பாட்டி வேடத்தில் நடித்தார். இந்நிலையில் திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
இதுகுறித்து இவர் கூறுகையில், ‛‛90வது பிறந்தநாளில் இப்படி ஒரு விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். நான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார் சவுகார் ஜானகி.