நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தற்போதும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஆச்சார்யா படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. தற்போது போலோ சங்கர், லூசிபர் ரீ-மேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் நேற்றிரவு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி தான். வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.