புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர் மறைந்த என்டிஆர் என்கிற என்டி ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி ஆந்திராவில் முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் அந்தக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த போதும் அவரது மாமனார் என்டிஆர் பெயரில் எந்த மாவட்டத்திற்கும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று ஆந்திராவில் உருவாக உள்ள 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே 13 புதிய மாவட்டங்கள் உள்ள நிலையில் புதிதாக சேர உள்ள 13 மாவட்டங்களால் மொத்தம் 26 மாவட்டங்கள் ஆந்திராவில் வர உள்ளன.
அதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்க உள்ளனர். அதன் தலைநகராக விஜயவாடா நகரம் இருக்கும். கிருஷ்ணா மாவட்டத்தின் தலைவராக மசூலிப்பட்டிணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டம் வைத்திருந்தார். அதனடிப்படையில் தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டம் அமைய உள்ளது தெலுங்குத் திரையுலகினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.