ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர் மறைந்த என்டிஆர் என்கிற என்டி ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி ஆந்திராவில் முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் அந்தக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த போதும் அவரது மாமனார் என்டிஆர் பெயரில் எந்த மாவட்டத்திற்கும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று ஆந்திராவில் உருவாக உள்ள 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே 13 புதிய மாவட்டங்கள் உள்ள நிலையில் புதிதாக சேர உள்ள 13 மாவட்டங்களால் மொத்தம் 26 மாவட்டங்கள் ஆந்திராவில் வர உள்ளன.
அதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்க உள்ளனர். அதன் தலைநகராக விஜயவாடா நகரம் இருக்கும். கிருஷ்ணா மாவட்டத்தின் தலைவராக மசூலிப்பட்டிணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டம் வைத்திருந்தார். அதனடிப்படையில் தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டம் அமைய உள்ளது தெலுங்குத் திரையுலகினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.