ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கோடியில் ஒருவன் படத்துக்குப் பிறகு தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதற்கு இடையில் கொலை என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.
பாலாஜி குமார் இயக்கி வரும் இப்படத்தை இன்பினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு கூட்டு குடும்பத்திற்குள் ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தது யார்? எதற்காக? அது எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.