பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

சின்னத்திரை காதல் பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலாக மாறிவிட்டது, என்று சொல்லும் அளவிற்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கடந்த காலங்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் மிக விரைவில் தீபக் - அபிநவ்யா திருமணம் நடைபெற உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் தீபக். அதேபோல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், ஆங்கர், நடிகை என பல ரோல்களில் கலக்கியவர் அபிநவ்யா. சித்திரம் பேசுதடி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
தீபக் - அபிநவ்யா ஜோடி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்நிலையில் தீபக் - அபிநவ்யா ஜோடிக்கு வருகிற ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை அவர்கள் தங்களது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள, சக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.