ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

சின்னத்திரை காதல் பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலாக மாறிவிட்டது, என்று சொல்லும் அளவிற்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கடந்த காலங்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் மிக விரைவில் தீபக் - அபிநவ்யா திருமணம் நடைபெற உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை தொடரில் ஹீரோவாக நடித்து வருபவர் தீபக். அதேபோல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், ஆங்கர், நடிகை என பல ரோல்களில் கலக்கியவர் அபிநவ்யா. சித்திரம் பேசுதடி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
தீபக் - அபிநவ்யா ஜோடி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்நிலையில் தீபக் - அபிநவ்யா ஜோடிக்கு வருகிற ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை அவர்கள் தங்களது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள, சக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.