ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ராஜூ டைட்டில் வென்றார். பிரியங்காவும், பாவனியும் இரண்டாவது, 3வது இடத்துக்கு வந்தனர். பொதுவாக பிக்பாஸ் இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் அழைக்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் பினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை. என்கிறார்.
மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.