தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ராஜூ டைட்டில் வென்றார். பிரியங்காவும், பாவனியும் இரண்டாவது, 3வது இடத்துக்கு வந்தனர். பொதுவாக பிக்பாஸ் இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை இறுதி போட்டிக்கு முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் அழைக்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் பினாலேவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்தேன். கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை. என்கிறார்.
மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான இமான் அண்ணாச்சியும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




