'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை படங்களை தொடர்ந்து சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது இடும்பன்காரி மற்றும் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் தினத்தை ஒட்டி தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன், தனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்திருக்கிறார்.
அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதோடு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தான் நன்றி செலுத்துவதாகவும், இந்த பொங்கல் நன்னாளில் மாடித்தோட்டத்தில் மஞ்சளை அறுவடை செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.