பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சினிமா வாய்ப்புள் இல்லாவிட்டாலும் இணையதளம் மூலம் தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். இதனாலேயே இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் ‛தில்லு இருந்தா போராடு' என்ற படத்தில் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
வனிதாவுடன் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா,யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர், சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ஜி.சாய்தர்ஷன் இசையையும் கவனிக்கிறார்கள். கே.முரளிதரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள். அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது.
பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற பெண் தாதாவின் உதவி கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் படம்தான் தில்லு இருந்தா போராடு. இதில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா நடிக்கிறார். இவ்வாறு கூறினார்.