நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
2012ம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன்பிறகு கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் உள்பட பல படங்களில் நடித்தார்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. திடீரென அவருக்கு வாய்ப்புகள் நின்று போனது. பிரபு தேவாவுடன் நடித்துள்ள யங் மங் சங் படம் வெளிவரவில்லை. கடைசியாக புலிக்குத்தி பாண்டி படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்திருந்தார். இதுவும் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்த நிலையில் லட்சுமி மேனன் சத்தமின்றி நடித்துள்ள படம் ஏஜிபி. ஆர்.வி.பரதன், சாய் ஜீவிதா என்கிற குழந்தை நட்சத்திரம், மோத்தீஸ்வர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம். இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார் என்றார்.
இப்படியான ஒரு கேரக்டரில்தான் அந்நியன் படத்தில் விக்ரம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.