பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மலையாள நடிகையான அஞ்சு குரியன். சென்னை டூ சிங்கப்பூர் படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு இக்ளு என்ற படத்தில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மலையாள படங்களுக்கு சென்று விட்டார். தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
எஸ்.ஏ.எஸ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. புதுமுகம் மணிவர்மன் இயக்குகிறார். இதில் அஞ்சு குரியன் ஆரி அர்ஜுனா ஜோடியாக நடிக்கிறார். தமன் குமார் இசை அமைக்கிறார். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஈரோடு மகேஷ், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.