பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்களே உள்ளது. இந்நிலையில் ஓடிடியில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியானது, ஓடிடியில் 13 போட்டியாளர்களுடன் 45 நாட்கள் நடைபெறும். இதற்கான பணியை பிக்பாஸ் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.
மினி பிக்பாஸ் நிகழ்ச்சியில், டைட்டில் வின்னர்களை தவிர அனைத்து சீசன்களிலும் கலந்து கொண்ட பிரபலங்களிலிருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தற்போதைய தகவலிலின் படி அனிதா சம்பத், ஜுலி, வனிதா விஜயக்குமார், சினேகன் உள்ளிட்டோர் லிஸ்டில் உள்ளனர். இந்த பிக்பாஸ் ஓடிடி வெர்சன் ஜனவரி இறுதியிலிருந்து 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகும் வகையில் தயாரிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளாராம். எனவே, இந்த நிகழ்ச்சி குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி, ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகுமா? அல்லது வேறு தளங்களில் ஒளிபரப்பாகுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த வாரம் முதல் போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதன்பின் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.