‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் திகழ்ந்தார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் திரை வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்த மகேஸ்வரி, தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.
அவரது திருமண வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லவில்லை. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி விரைவிலேயே விவகாரத்து பெற்றார். மகேஸ்வரிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது தனிமை குறித்து மிகவும் வருந்தி பேசியுள்ளார். அதில், 'ரெண்டாவது கல்யாணத்த பத்தி யோசிக்கவே முடியல. யார் மேலயும் நம்பிக்கை வரவே மாட்டங்குது. என்னோட பையன், என்னோட அம்மா, என்னோட கேரியர் மூன்றையும் பேலன்ஸ் பண்ணி ஆகனும். இத புரிந்து கொள்கிற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்வு பண்ண முடியல. வரபோறவர் என்னுடைய பையனையும் ஏற்றுக் கொள்ளணும். அதனால இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்கிற பயம் இருக்கு. நானும் என் அம்மாவும் சிங்கிள் மதர் தான்' என்று பேசும் போது வீஜே மகஸ்வரி, அழுது கொண்டே பேசினார்.