பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
2021ம் ஆண்டு நடிகர் சிம்புவிற்கு திருப்புமுனை தந்த ஆண்டாக அமைந்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புத்தாண்டை முன்னிட்டு சிம்பு வெளியிட்ட அறிக்கை : நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும், நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.
இறைவனின் கருணையால் இந்த புதிய வருடத்தை காண உள்ளோம். தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை பெரிய வெற்றி படமாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும், உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.
என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக மக்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல
இவ்வாறு தெரிவித்துள்ளார்.