ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இரண்டு பிரம்மாண்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்று ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்', மற்றொன்று பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் 'ராதேஷ்யாம்'.
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களில், 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதியும், 'ராதேஷ்யாம்' படம் ஜனவரி 14ம் தேதியும் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.
தற்போது கொரோனா மூன்றாவது அலை ஒமிக்ரான் வடிவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துவிட்டார்கள்.
அதனால், படங்களின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் ஒமிக்ரான் பரவல் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகிறார்கள். அதன் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தயங்குவார்கள். எனவே, இந்த இரண்டு படங்களையும் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.