ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
இந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இரண்டு பிரம்மாண்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்று ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்', மற்றொன்று பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் 'ராதேஷ்யாம்'.
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களில், 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதியும், 'ராதேஷ்யாம்' படம் ஜனவரி 14ம் தேதியும் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.
தற்போது கொரோனா மூன்றாவது அலை ஒமிக்ரான் வடிவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துவிட்டார்கள்.
அதனால், படங்களின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் ஒமிக்ரான் பரவல் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகிறார்கள். அதன் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தயங்குவார்கள். எனவே, இந்த இரண்டு படங்களையும் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.