15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. |

இந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இரண்டு பிரம்மாண்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்று ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்', மற்றொன்று பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் 'ராதேஷ்யாம்'.
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களில், 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதியும், 'ராதேஷ்யாம்' படம் ஜனவரி 14ம் தேதியும் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.
தற்போது கொரோனா மூன்றாவது அலை ஒமிக்ரான் வடிவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துவிட்டார்கள்.
அதனால், படங்களின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் ஒமிக்ரான் பரவல் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகிறார்கள். அதன் காரணமாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரத் தயங்குவார்கள். எனவே, இந்த இரண்டு படங்களையும் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.