ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்க சுகுமார் இயக்கத்தில் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் லாபக்கணக்கில் நுழைந்துள்ளது.
இப்படத்தின் மொத்த வியாபாரம் 150 கோடி வரை நடந்துள்ளது. அத்தொகையைக் கடந்து விட்டால் இப்படம் லாபத்தில் நுழைந்துவிடும். வெளியான மூன்று நாட்களிலேயே 173 கோடி ரூபாயை வசூலித்து இப்படம் லாபக்கணக்கில் நுழைந்துவிட்டது.
பல ஏரியாக்களில் இப்படம் 'பாகுபலி 2' படம் அல்லாத சாதனையை வசூலில் படைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழில் வெற்றி பெறவேண்டும் என்று எதிர்பார்த்த அல்லு அர்ஜுனின் ஆசை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
ஹிந்தியில் மூன்று நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அங்கு படத்திற்கான விளம்பரம் மிகக் குறைவு. இருப்பினம் இந்த வசூலே படத்திற்கு எதிர்பாராதது என்கிறார்கள்.
தமிழிலும் கூட இப்படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியைக் கூட படம் வெளியாகி இத்தனை நாட்களில் போடவேயில்லை. இதையெல்லாம் சரி செய்திருந்தால் இப்படம் இன்னும் அதிகமான வசூலை பெற்றிருக்கும் என டோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.