சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்க சுகுமார் இயக்கத்தில் கடந்த வாரம் ஐந்து மொழிகளில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் லாபக்கணக்கில் நுழைந்துள்ளது.
இப்படத்தின் மொத்த வியாபாரம் 150 கோடி வரை நடந்துள்ளது. அத்தொகையைக் கடந்து விட்டால் இப்படம் லாபத்தில் நுழைந்துவிடும். வெளியான மூன்று நாட்களிலேயே 173 கோடி ரூபாயை வசூலித்து இப்படம் லாபக்கணக்கில் நுழைந்துவிட்டது.
பல ஏரியாக்களில் இப்படம் 'பாகுபலி 2' படம் அல்லாத சாதனையை வசூலில் படைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழில் வெற்றி பெறவேண்டும் என்று எதிர்பார்த்த அல்லு அர்ஜுனின் ஆசை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
ஹிந்தியில் மூன்று நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அங்கு படத்திற்கான விளம்பரம் மிகக் குறைவு. இருப்பினம் இந்த வசூலே படத்திற்கு எதிர்பாராதது என்கிறார்கள்.
தமிழிலும் கூட இப்படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியைக் கூட படம் வெளியாகி இத்தனை நாட்களில் போடவேயில்லை. இதையெல்லாம் சரி செய்திருந்தால் இப்படம் இன்னும் அதிகமான வசூலை பெற்றிருக்கும் என டோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.