இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள 'புஷ்பா' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ள இப்படத்திற்கு முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியானதால் ஒவ்வொரு மொழியிலும் வெளியீட்டிற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்கள்.
மும்பை, பெங்களூரூ, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொழிக்கு ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அவை அனைத்திலும் ராஷ்மிகா தவறாமல் கலந்து கொண்டார். அதேசமயம், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
படத்தில் ராஷ்மிகாவிற்கும் பெரிய அளவில் பாராட்டுக்கள் வரவில்லை. கடைசி நேரத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலைச் சேர்த்தார்கள். அந்தப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய ஹிட் ஆகிவிட்டது. சமந்தா அலையில் ராஷ்மிகாவின் பெயர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.