எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள 'புஷ்பா' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ள இப்படத்திற்கு முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வெளியானதால் ஒவ்வொரு மொழியிலும் வெளியீட்டிற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்கள்.
மும்பை, பெங்களூரூ, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் மொழிக்கு ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அவை அனைத்திலும் ராஷ்மிகா தவறாமல் கலந்து கொண்டார். அதேசமயம், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
படத்தில் ராஷ்மிகாவிற்கும் பெரிய அளவில் பாராட்டுக்கள் வரவில்லை. கடைசி நேரத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலைச் சேர்த்தார்கள். அந்தப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய ஹிட் ஆகிவிட்டது. சமந்தா அலையில் ராஷ்மிகாவின் பெயர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.