ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஒரு காலத்தில் படங்களை தான் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்து தொலைக்காட்சிகளின் கவனமும் சீரியல் பக்கம் திரும்பிவிட்டது. அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொடர்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது.
அந்த வகையில் பல வருடங்களாக சீரியல் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் டிவி ஒன்று நான்கு நடிகைகளை வைத்து பிரம்மாண்டமாக தொடர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த புதிய தொடரில் ராதிகா சரத்குமார், குஷ்பு, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தற்போது இவர்கள் நால்வரையும் ஒரே சீரியலில் நடிக்க வைத்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரம்மாண்டத்தை நிகழ்த்த அந்த டிவி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் கொங்கு மண்டலத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.