ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ஒரு காலத்தில் படங்களை தான் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்து தொலைக்காட்சிகளின் கவனமும் சீரியல் பக்கம் திரும்பிவிட்டது. அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொடர்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது.
அந்த வகையில் பல வருடங்களாக சீரியல் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் டிவி ஒன்று நான்கு நடிகைகளை வைத்து பிரம்மாண்டமாக தொடர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த புதிய தொடரில் ராதிகா சரத்குமார், குஷ்பு, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தற்போது இவர்கள் நால்வரையும் ஒரே சீரியலில் நடிக்க வைத்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரம்மாண்டத்தை நிகழ்த்த அந்த டிவி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் கொங்கு மண்டலத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.




