எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஒரு காலத்தில் படங்களை தான் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்து தொலைக்காட்சிகளின் கவனமும் சீரியல் பக்கம் திரும்பிவிட்டது. அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொடர்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது.
அந்த வகையில் பல வருடங்களாக சீரியல் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் டிவி ஒன்று நான்கு நடிகைகளை வைத்து பிரம்மாண்டமாக தொடர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த புதிய தொடரில் ராதிகா சரத்குமார், குஷ்பு, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தற்போது இவர்கள் நால்வரையும் ஒரே சீரியலில் நடிக்க வைத்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரம்மாண்டத்தை நிகழ்த்த அந்த டிவி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் கொங்கு மண்டலத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.