பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
தென்னிந்திய மொழிகளில் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை நேஹா கவுடா. பெங்களூரை சார்ந்த நேஹா கவுடா ஒரு தியேட்டர் நடிகை. எனவே, அவருக்கு சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதாக கிடைத்தது. தமிழ் சின்னத்திரையில் கல்யாண பரிசு சீரியலின் மூலம் அறிமுகமான நேஹாவை, தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்த சீரியல் விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியல் தான்.
இந்நிலையில் நேஹாவின் காதல் கதை தமிழ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கலர்ஸ் கன்னடா டிவியில் நடன போட்டியில் சாந்தனும் - நேஹா கவுடாவும் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய நேஹா, 'நானும் சாந்தனும் பள்ளியிலிருந்து நல்ல நண்பர்கள், அவர் என்னிடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலை சொல்லிவிட்டார். முதலில் எனக்கு அது பிடிக்கவில்லை. அதன்பிறகு விரைவிலேயே இருவரும் காதலர்களாக மாறிவிட்டோம்' என கூறியுள்ளார். நேஹா - சாந்தன் ஜோடிக்கு 2018 ஆம் ஆண்டிலேயே திருமணம் முடிந்துவிட்டது. கன்னட தொலைக்காட்சிகளில் ஜோடியாக சுற்றி வரும் இவர்கள் இருவருக்கும் தற்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.