அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” |
2017ம் ஆண்டு சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்ட னர். நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண உறவு சமீபத்தில் முறிந்தது. சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், நாக சைதன்யாவை பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு, விவகாரத்துக்கு சென்றால் நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். அந்த அளவுக்கு என்னை பலவீனமானவள் என்று கருதி வந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.
நான் ரொம்ப வலிமையுடனும் மன உறுதியுடனும் இருக்கிறேன். இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று கருதவில்லை. நான் வலிமையாக இருக்கிறேன் என்பதை நினைக்கையில் ரொம்ப பெருமையாக உள்ளது எனறு தெரிவித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சமந்தா, தற்போது கதையின் நாயகியாக நடிக்கும் யசோதா என்ற ஐந்து மொழிப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சர்வதேச படமான அரேஞ்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற படத்திலும் நடிக்கப்போகிறார்.