சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
2017ம் ஆண்டு சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்ட னர். நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண உறவு சமீபத்தில் முறிந்தது. சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், நாக சைதன்யாவை பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு, விவகாரத்துக்கு சென்றால் நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். அந்த அளவுக்கு என்னை பலவீனமானவள் என்று கருதி வந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.
நான் ரொம்ப வலிமையுடனும் மன உறுதியுடனும் இருக்கிறேன். இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று கருதவில்லை. நான் வலிமையாக இருக்கிறேன் என்பதை நினைக்கையில் ரொம்ப பெருமையாக உள்ளது எனறு தெரிவித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள சமந்தா, தற்போது கதையின் நாயகியாக நடிக்கும் யசோதா என்ற ஐந்து மொழிப் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சர்வதேச படமான அரேஞ்மென்ட்ஸ் ஆப் லவ் என்ற படத்திலும் நடிக்கப்போகிறார்.