சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகை பூஜாகாந்தி மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்யப் போவதாக டாக்டர் கிரண் கூறியுள்ளார். நடிகை பூஜாகாந்திக்கும், தொழில் அதிபர் ஆனந்த் கவுடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களது நிச்சயதார்த்தத்துடன் திருமணம் நின்று போனது. திருமண நிச்சயதார்த்தம் முடிந்த 35 நாட்களில் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், நடிகை பூஜாகாந்தி மீது டாக்டர் கிரண் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை சுப்பிரமணியபுரா போலீசில் கொடுத்தார். நடிகை பூஜாகாந்தி தன்னை கொலை செய்து விடுவதாக எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்து உள்ளதாக அவர் புகாரில் கூறி இருக்கிறார்.
ஆனால், அந்த புகாரை நடிகை பூஜாகாந்தி மறுத்தார். சினிமா துறையில் தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டாக்டர் கிரண் பொய் புகார் செய்திருப்பதாக போலீசில் புகார் செய்தார். டாக்டர் கிரண், நடிகை பூஜாகாந்தி இருவர் கொடுத்த புகாரின் பேரிலும், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் நடிகை பூஜாகாந்திக்கு எதிராக நடிகர் சங்கத்திலும், மூத்த நடிகர் அம்பரீசிடமும் டாக்டர் கிரண் புகார் செய்ய முடிவு செய்துள்ளார். இதுபற்றி கிரண் அளித்துள்ள பேட்டியில், ‘நடிகை பூஜாகாந்திக்கு குழந்தை இருப்பது குறித்து ஆனந்த் கவுடாவுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். பூஜா காந்தி குறித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்யவிருக்கிறேன், என்றார்.