கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிப் படத்தில் பணி புரிந்தவர்கள் அவர்களது சம்பளத்தை ஏற்றிவிடுவார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மாநாடு' படம் எதிர்பார்ப்புகளை மீறி வெற்றி பெற்றுள்ளது. படத்தைப் பற்றி பலரும் பாராட்டிவிட்டார்கள்.
இந்தப் படத்தின் வெற்றியால் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதையைத் தொட்டிருக்கிறார் சிம்பு. தற்போது 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு இனி ஒப்பந்தமாக உள்ள புதிய படங்களில் நடிக்க சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், எஸ்ஜே சூர்யா ஏற்கெனவே நடிக்க ஒத்துக் கொண்ட படங்களில் கூட சம்பளத்தை உயர்த்திக் கேட்டு வருகிறாராம். 'மாநாடு' படத்தில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. புதுவிதமான வில்லத்தனத்தில் சூர்யா ரசிகர்களைக் கவர்கிறார் என அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க பலரும் திட்டமிட்டுள்ளார்களாம்.
இயக்குனராக விஜய், அஜித் ஆகியோருக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த எஸ்ஜே சூர்யா, தனக்குக் கிடைத்த 'மாநாடு' திருப்புமுனையால் சம்பளத்தை உயர்த்துவதும் தவறில்லை. அதற்காக ஏற்கெனவே நடிக்க ஒத்துக கொண்ட படங்களில் உயர்த்துவது தவறு என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.