தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிப் படத்தில் பணி புரிந்தவர்கள் அவர்களது சம்பளத்தை ஏற்றிவிடுவார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மாநாடு' படம் எதிர்பார்ப்புகளை மீறி வெற்றி பெற்றுள்ளது. படத்தைப் பற்றி பலரும் பாராட்டிவிட்டார்கள்.
இந்தப் படத்தின் வெற்றியால் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதையைத் தொட்டிருக்கிறார் சிம்பு. தற்போது 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு இனி ஒப்பந்தமாக உள்ள புதிய படங்களில் நடிக்க சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், எஸ்ஜே சூர்யா ஏற்கெனவே நடிக்க ஒத்துக் கொண்ட படங்களில் கூட சம்பளத்தை உயர்த்திக் கேட்டு வருகிறாராம். 'மாநாடு' படத்தில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. புதுவிதமான வில்லத்தனத்தில் சூர்யா ரசிகர்களைக் கவர்கிறார் என அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க பலரும் திட்டமிட்டுள்ளார்களாம்.
இயக்குனராக விஜய், அஜித் ஆகியோருக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த எஸ்ஜே சூர்யா, தனக்குக் கிடைத்த 'மாநாடு' திருப்புமுனையால் சம்பளத்தை உயர்த்துவதும் தவறில்லை. அதற்காக ஏற்கெனவே நடிக்க ஒத்துக கொண்ட படங்களில் உயர்த்துவது தவறு என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.