ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பழம்பெரும் தெலுங்கு பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி. 37 ஆண்டுகளுகாக தெலுங்கு திரைப்படங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 66 வயதான சீதாராம சாஸ்திரி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.
கே.விஸ்வநாத் இயக்கிய ஜனனி ஜன்மபூமி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார். கடைசியாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பாடல் எழுதினார். பல்வேறு மாநில விருது பெற்ற அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் சிரிவென்னேலா சீதாராம சாஸ்திரி. அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. கவிதை மற்றும் பன்முகத்தன்மை அவரது எழுத்துக்களில் வெளிப்படும். தெலுங்கு மொழியின் புகழுக்காக கடுமையாக உழைத்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.