பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 25ஆம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ள மாநாடு படம் திரைக்கு வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் மாநாடு படத்தைப்பார்த்து விட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு போன் செய்து வாழ்த்தியிருக்கிறார் ரஜினி.
இதுகுறித்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள எஸ்.ஜே. சூர்யா, இன்று எனது நடிப்புத்திறமைக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். உங்களின் அன்பான வாழ்த்து எனது சினிமா பயணத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.