பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள மாநாடு படம் கடந்த 25ந் தேதி பெரும் போராட்டத்துக்கு பிறகு வெளிவந்தது. விமர்சனங்களும் பெரும்பாலும் பாராட்டியே வந்துள்ளதால் அடாத மழையிலும் படம் வசூலை குவிப்பதாக கூறப்படுகிறது. சிம்பு உடம்பை குறைத்து, அடக்கி வாசித்து, பன்ஞ் டயலாக் எதுவும் பேசாமல் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருப்பதால் படம் எல்லோருக்கும் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு படங்களிலேயே இந்த படம்தான் அதிகம் வசூலிப்பதாக விநியோகஸ்தர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து படக் குழுவினர் வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுக்கு கேக் ஊட்டி மகிழும் படங்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினி பாராட்டு
இதனிடையே மாநாடு படத்தை பார்த்துவிட்டு நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினரை போனில் அழைத்து பாராட்டி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுகுறித்து தங்களின் மகிழ்ச்சியான பதிவுகளை சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, வெங்கட்பிரபு ஆகியோர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.