Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜாங்கோ' படம்... வேற மாறிங்க என்கிறார் ஹீரோ சதீஷ்குமார்

27 நவ, 2021 - 13:52 IST
எழுத்தின் அளவு:
Jango-Sathish-about-his-movie-experience

''கணவன் - மனைவி இடையிலான குடும்பக் கதை, டைப் லுாப் உளவியல் சார்ந்து, வேற்று கிரக கலன் வருகை, அறிவியல் கற்பனை கலந்த வித்தியாசமான 'த்ரில்லர் மூவி','' என்கிறார் 'ஜாங்கோ' படத்தின் ஹீரோ சதீஷ்குமார்.

அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை, மாயவன் போன்ற வித்தியாசமான படங்களை தயாரிக்கும் சி.வி.குமார், ஜென் ஸ்டுடியோஸ் சுரேந்திரன் ரவியுடன் இணைந்து, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் 'ஜாங்கோ'. இப்படத்தை புதுமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முதல் 'டைம் லுாப்' கதை என்ற பெருமையுடன், இந்த படம் திரையரங்குகளை கலக்கி வருகிறது.

கோவை, ஒண்டிப்புதுார், நடுப்பாளையத்தை சேர்ந்த புதுமுக நடிகர் சதீஷ்குமார், 'டிக்டாக்' புகழ் மிருணாளினி ரவி ஆகியோர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிதா சம்பத், ஹரீஷ் பொரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஹீரோ சதீஷ்குமார் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி!

முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்த அனுபவம் பற்றி?
கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏதாவது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்கிற ஆசை. இதற்காக பல புரொடியூசர், இயக்குனரிடம் எனது புகைப்படங்களை கொடுத்து படத்திற்காக காத்திருந்தேன். 'ஜாங்கோ' படத்திற்கு ஒரு புதுமுக நபர் தேவை என்பதால், என்னை தேர்வு செய்தனர். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. பின்னர், கதைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டேன்.

நடிப்பிற்கு முன் ஏதாவது பயிற்சி மேற்கொண்டீர்களா?
கண்டிப்பாக. டாக்டராக நடிக்க வேண்டும் என்பதால் கோவையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் முறையை நேரடியாக பார்த்து சில தகவல்களை கற்று கொண்டேன். பின்னர், மருத்துவர்களின் அணுகுமுறை, பழக்க வழக்கங்களை கேட்டறிந்தேன்.

'டைம் லுாப்' என்றால் என்ன... தெளிவாக கூறுங்களேன்...?
ஒரே நாளின் நிகழ்வுகள் மறுபடி, மறுபடி நிகழ்வது. தமிழில் இது தான் முதல் படம். டைம் லுாப் மையப்படுத்தியே படம் நகர்கிறது. படம் முழுவதும் விறுவிறுப்பு மற்றும் அடுத்தது என்ன நடக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு நிறைந்திருக்கும்.

இந்த படத்தில் மக்களுக்கு ஏதாவது 'மெசேஜ்' உள்ளதா?
கணவன்- மனைவி இடையிலான குடும்பக் கதை, டைப் லுாப் உளவியல் சார்ந்து, வேற்று கிரக கலன் வருகை, அறிவியல் கற்பனை கலந்த வித்தியாசமான 'த்ரில்லர் மூவி'.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாநாடு - பாராட்டிய ரஜினி : படக்குழு மகிழ்ச்சிமாநாடு - பாராட்டிய ரஜினி : படக்குழு ... கலக்கலான போட்டோக்களை வெளியிட்ட எஸ்தர் அனில் கலக்கலான போட்டோக்களை வெளியிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in