பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு உள்ளிட்ட முக்கியமான படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் மல்லிசேரி தமிழ், மலையாளத்தில் இயக்கும் படம் நண்பகல் நேரத்து மயக்கம். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். மம்முட்டியே படத்தை தயாரிக்கிறார்.
வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பழனியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக இந்த படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் இந்த படத்தில் இணைந்துள்ளார். பழனியில் நடந்து வரும் படப்பிடிப்பில் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.