சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை பல இளைஞர்களுக்கு முன்னோடியானது, நடிப்பு மட்டுமல்லாமல் மனிதாபிமானம், சமூக சேவை, கண்தானம், கல்வி உதவி என பல தளங்களில் அவர் பணியாற்றினார். எனவே அவரது வாழ்க்கை திரைப்படமாக தயாராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதற்கு பதில் அளித்துள்ள கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரான சந்தோஷ் ஆனந்த்ராம், புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வர என்னால் இயன்ற முயற்சிகளை செய்வேன் என்று கூறியிருக்கிறார். இவர்தான் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான யுவரத்னா படத்தை இயக்கியவர். வேறு சிலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.