நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
தான் இயக்கி, தான் மட்டுமே படம் முழுக்க நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை தற்போது ஹிந்தியில் அபிஷேக்பச்சனை வைத்து இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்த நிலையில் அவரது முகநூலை யாரோ விஷமிகள் கடந்த ஞாயிறன்று ஹேக் செய்துள்ளனர். அதில், என் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவன் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில ஸ்வீட் எனிமிஸ் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் செய்ய சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள் என தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இரண்டு தினங்களுக்கு பிறகு பார்த்திபனின் முகநூல் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி, ‛‛முழுச்சிட்டிருக்கும்போதே கண்ணை பிடுங்கி காயிலாங்கடையில் வித்துட்டுப் போயிடுறாங்க பேடு ஹேக்கர்ஸ். ‛‛கெடுத்திடும் புத்தி இருவழி கத்தி. எடுத்தவனையே குத்தி காவு அது வாங்கிடாதோ? இரவின் நிழல்களில் நான் எழுதிய பாடல் வரிகள். திரும்பக் கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி. இனி இனிதே நட்பு தொடரும்'' என ரெதிவித்துள்ளார் பார்த்திபன்.