ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷனையும் கூட்டணி சேர்த்து மைக்கேல் என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். இந்தநிலையில் எனது குருவுடன் இணைந்து நடிப்பதில் சந்தோஷம் என அவருடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சந்தீப் கிஷன்.
இதுபற்றி சந்தீப் கிஷன் கூறும்போது, "கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அனேகமாக அவரிடம் மோசமாக பணியாற்றிய உதவி இயக்குனர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். இந்த திரையுலகில் எனக்கென ஒரு அடையாளம் கொடுத்தவர் அவர்தான். அதன்பிறகு தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடனேயே ஒரு படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.