பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷனையும் கூட்டணி சேர்த்து மைக்கேல் என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். இந்தநிலையில் எனது குருவுடன் இணைந்து நடிப்பதில் சந்தோஷம் என அவருடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சந்தீப் கிஷன்.
இதுபற்றி சந்தீப் கிஷன் கூறும்போது, "கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அனேகமாக அவரிடம் மோசமாக பணியாற்றிய உதவி இயக்குனர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். இந்த திரையுலகில் எனக்கென ஒரு அடையாளம் கொடுத்தவர் அவர்தான். அதன்பிறகு தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடனேயே ஒரு படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.