தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் |
திருமணம் ஆன பின்னரும் கூட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகை என்கிற தனது ஸ்தானத்தை சமந்தா இழக்கவே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா நடித்த பேமிலிமேன்-2 என்கிற வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்துவிட்ட சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டில் நுழைய தடையேதும் இருக்காது. இந்தநிலையில் எல்லாம் சரியாக அமைந்தால் நான் ஏன் பாலிவுட்டில் நடிக்க கூடாது என கேட்டுள்ளார் சமந்தா.
இதுகுறித்து கூறியுள்ள அவர், “நல்ல கதை தேடிவந்தால் நான் நிச்சயம் ஆர்வமாக இருக்கிறேன். மொழி என்பது எனக்கு பெரிய விஷயம் அல்ல, நல்ல ஸ்க்ரிப்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.. கதை நம் இதயத்தை தொட வேண்டும்.. அது எனக்கு பொருந்துகிறதா என பார்க்க வேண்டும்.. அந்த கதையை என்னால் சரியாக செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். இந்த கேள்விகள் தான் ஒவ்வொருமுறை புதிய படம் ஒப்புக்கொள்ளும்போது என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. என்னை பொறுத்தவரை இதுதான் முக்கியமான விஷயம்” என கூறியுள்ளார் சமந்தா.