‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் |

திருமணம் ஆன பின்னரும் கூட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகை என்கிற தனது ஸ்தானத்தை சமந்தா இழக்கவே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா நடித்த பேமிலிமேன்-2 என்கிற வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்துவிட்ட சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டில் நுழைய தடையேதும் இருக்காது. இந்தநிலையில் எல்லாம் சரியாக அமைந்தால் நான் ஏன் பாலிவுட்டில் நடிக்க கூடாது என கேட்டுள்ளார் சமந்தா.
இதுகுறித்து கூறியுள்ள அவர், “நல்ல கதை தேடிவந்தால் நான் நிச்சயம் ஆர்வமாக இருக்கிறேன். மொழி என்பது எனக்கு பெரிய விஷயம் அல்ல, நல்ல ஸ்க்ரிப்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.. கதை நம் இதயத்தை தொட வேண்டும்.. அது எனக்கு பொருந்துகிறதா என பார்க்க வேண்டும்.. அந்த கதையை என்னால் சரியாக செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். இந்த கேள்விகள் தான் ஒவ்வொருமுறை புதிய படம் ஒப்புக்கொள்ளும்போது என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. என்னை பொறுத்தவரை இதுதான் முக்கியமான விஷயம்” என கூறியுள்ளார் சமந்தா.