ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணம் ஆன பின்னரும் கூட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகை என்கிற தனது ஸ்தானத்தை சமந்தா இழக்கவே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா நடித்த பேமிலிமேன்-2 என்கிற வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்துவிட்ட சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டில் நுழைய தடையேதும் இருக்காது. இந்தநிலையில் எல்லாம் சரியாக அமைந்தால் நான் ஏன் பாலிவுட்டில் நடிக்க கூடாது என கேட்டுள்ளார் சமந்தா.
இதுகுறித்து கூறியுள்ள அவர், “நல்ல கதை தேடிவந்தால் நான் நிச்சயம் ஆர்வமாக இருக்கிறேன். மொழி என்பது எனக்கு பெரிய விஷயம் அல்ல, நல்ல ஸ்க்ரிப்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.. கதை நம் இதயத்தை தொட வேண்டும்.. அது எனக்கு பொருந்துகிறதா என பார்க்க வேண்டும்.. அந்த கதையை என்னால் சரியாக செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். இந்த கேள்விகள் தான் ஒவ்வொருமுறை புதிய படம் ஒப்புக்கொள்ளும்போது என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. என்னை பொறுத்தவரை இதுதான் முக்கியமான விஷயம்” என கூறியுள்ளார் சமந்தா.