ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு |

திருமணம் ஆன பின்னரும் கூட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகை என்கிற தனது ஸ்தானத்தை சமந்தா இழக்கவே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தா நடித்த பேமிலிமேன்-2 என்கிற வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்துவிட்ட சமந்தாவுக்கு தற்போது பாலிவுட்டில் நுழைய தடையேதும் இருக்காது. இந்தநிலையில் எல்லாம் சரியாக அமைந்தால் நான் ஏன் பாலிவுட்டில் நடிக்க கூடாது என கேட்டுள்ளார் சமந்தா.
இதுகுறித்து கூறியுள்ள அவர், “நல்ல கதை தேடிவந்தால் நான் நிச்சயம் ஆர்வமாக இருக்கிறேன். மொழி என்பது எனக்கு பெரிய விஷயம் அல்ல, நல்ல ஸ்க்ரிப்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.. கதை நம் இதயத்தை தொட வேண்டும்.. அது எனக்கு பொருந்துகிறதா என பார்க்க வேண்டும்.. அந்த கதையை என்னால் சரியாக செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். இந்த கேள்விகள் தான் ஒவ்வொருமுறை புதிய படம் ஒப்புக்கொள்ளும்போது என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. என்னை பொறுத்தவரை இதுதான் முக்கியமான விஷயம்” என கூறியுள்ளார் சமந்தா.