இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வரும் நவ-25ம் தேதி மாநாடு படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இதன் பிரீ புரமோஷன் நிகழ்ச்சியில், தன்னை சுற்றி பலர் பிரச்னை செய்கிறார்கள் என்று கூறி சிம்பு மேடையிலேயே கண் கலங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் வேட்டை மன்னன் படத்தில் நடித்த சிம்பு, அந்தப்படம் ஏன் கைவிடப்பட்டது என தற்போது மனம் திறந்துள்ளார்.
"வேட்டை மன்னன் படம் கிட்டத்தட்ட ஒரு கல்ட் கிளாசிக் படம். அந்தப்படத்தை அப்போது செய்தால் சரியாக இருக்காது என அதை நிறுத்திவிட்டோம். நெல்சன் திலீப்குமார் திறமையான இயக்குனர். அவருடைய டாக்டர் படத்தில் ஒர்க் அவுட் ஆன டார்க் காமெடியை ரசித்தேன். ஆனால் வேட்டை மன்னன் படத்தின் டார்க் காமெடியில் பத்து சதவீதம் கூட டாக்டரில் இல்லை என்றுதான் சொல்வேன்" என கூறியுள்ளார்.




