சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'.
இப்படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவு ஒரு வாரம் முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது. சென்னையில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கான முன்பதிவை ரோகிணி, ஜிகே சினிமாஸ் ஆகிய தியேட்டர்கள் ஆரம்பித்தன. அந்த காட்சிகளுக்கான முன்பதிவு மொத்தமாக முடிந்துவிட்டது. மற்ற தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. அடுத்து 8 மணி சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சிம்பு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்களுக்குக் கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. இப்போது 'மாநாடு' படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் முன்பதிவுக்கு ஆதரவு இருக்கிறது என தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.