ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அன்றைய தினம் தெலுங்கில் சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படமும் திரைக்கு வருகிறது.
பெரும்பாலும், ஆந்திராவில் முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தமிழ் நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு தயங்குவார்கள். ஆனால் சூர்யாவிற்கு தெலுங்கில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் சிரஞ்சீவி படம் வெளியாகும் அதே நாளில் எதற்கும் துணிந்தவன் படத்தையும் துணிச்சலாக இறக்கி விடுகிறார்கள். அதனால் சூர்யா படத்திற்காக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.




