மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அன்றைய தினம் தெலுங்கில் சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படமும் திரைக்கு வருகிறது.
பெரும்பாலும், ஆந்திராவில் முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தமிழ் நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு தயங்குவார்கள். ஆனால் சூர்யாவிற்கு தெலுங்கில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் சிரஞ்சீவி படம் வெளியாகும் அதே நாளில் எதற்கும் துணிந்தவன் படத்தையும் துணிச்சலாக இறக்கி விடுகிறார்கள். அதனால் சூர்யா படத்திற்காக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.