'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அன்றைய தினம் தெலுங்கில் சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படமும் திரைக்கு வருகிறது.
பெரும்பாலும், ஆந்திராவில் முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தமிழ் நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு தயங்குவார்கள். ஆனால் சூர்யாவிற்கு தெலுங்கில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் சிரஞ்சீவி படம் வெளியாகும் அதே நாளில் எதற்கும் துணிந்தவன் படத்தையும் துணிச்சலாக இறக்கி விடுகிறார்கள். அதனால் சூர்யா படத்திற்காக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.