டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் ஆந்திரா, தெலுங்கானாவிலும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அன்றைய தினம் தெலுங்கில் சிரஞ்சீவி - ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படமும் திரைக்கு வருகிறது.
பெரும்பாலும், ஆந்திராவில் முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தமிழ் நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு தயங்குவார்கள். ஆனால் சூர்யாவிற்கு தெலுங்கில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் சிரஞ்சீவி படம் வெளியாகும் அதே நாளில் எதற்கும் துணிந்தவன் படத்தையும் துணிச்சலாக இறக்கி விடுகிறார்கள். அதனால் சூர்யா படத்திற்காக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.