மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முன்னணி நடிகைகளாக கோலோச்சியவர்கள் ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் லெவலுக்கு இறங்கி வருவதை பார்த்துள்ளோம். அதேசமயம் பீக்கில் இருந்தாலும் கூட நட்புக்காக இன்னொருவரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த இரண்டாவது லிஸ்ட்டில் தான் தற்போது சமந்தாவும் சேர்ந்துள்ளார்.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா சம்மதித்து விட்டார் என்பதும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்பதும் தெரிந்த செய்தி தான். இந்தப்பாடலை ஐதராபாத் நகரிலேயே பிரமாண்ட செட் அமைத்து படமாக்குவதற்கு தீர்மானித்து இருந்தார்களாம்..
ஆனால் சமந்தாவோ நகரை விட்டு சற்றே தொலைவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப்பாடலின் படப்பிடிப்பை நடத்துமாறு இயக்குனர் சுகுமாரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம். சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிவதாக அறிவித்த சமந்தா, நகரின் அருகில் படப்பிடிப்பு நடந்தால் மீடியாக்களை சந்திக்க வேண்டி வருமே என்பதால் அதை தவிர்ப்பதற்காக இந்த இடமாற்ற கோரிக்கையை வைத்துள்ளாராம்.