மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் |
முன்னணி நடிகைகளாக கோலோச்சியவர்கள் ஒருகட்டத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் லெவலுக்கு இறங்கி வருவதை பார்த்துள்ளோம். அதேசமயம் பீக்கில் இருந்தாலும் கூட நட்புக்காக இன்னொருவரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த இரண்டாவது லிஸ்ட்டில் தான் தற்போது சமந்தாவும் சேர்ந்துள்ளார்.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா சம்மதித்து விட்டார் என்பதும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்பதும் தெரிந்த செய்தி தான். இந்தப்பாடலை ஐதராபாத் நகரிலேயே பிரமாண்ட செட் அமைத்து படமாக்குவதற்கு தீர்மானித்து இருந்தார்களாம்..
ஆனால் சமந்தாவோ நகரை விட்டு சற்றே தொலைவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப்பாடலின் படப்பிடிப்பை நடத்துமாறு இயக்குனர் சுகுமாரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம். சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிவதாக அறிவித்த சமந்தா, நகரின் அருகில் படப்பிடிப்பு நடந்தால் மீடியாக்களை சந்திக்க வேண்டி வருமே என்பதால் அதை தவிர்ப்பதற்காக இந்த இடமாற்ற கோரிக்கையை வைத்துள்ளாராம்.