விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

நடன இயக்குனரும், நடிகருமான ஹரிகுமார் இயக்கி உள்ள தேள் படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பிரபுதேவாவுடன் நடனம் ஆடும் வரை வேறு படங்களில் ஆட மாட்டேன் என்று சம்யுக்தா கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் பாடலை படமாக்கும்போது நான் விபத்தில் சிக்கி ஓய்வெடுத்து வந்தேன். மைசூரில் பைக் ஓட்டும் போது எதிர்பாராதவிதமாக அது நடந்து விட்டது. பிரபுதேவா அவரது பிஸியான நேரத்திலும் என்னை ஓய்வெடுக்க சொல்லி, ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இப்போது வரையிலும் நான் 8 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்திலும் எனக்கு டான்ஸ் இல்லை. பிரபுதேவாவுடன் முதல் வாய்ப்பை நான் மிஸ் செய்து விட்டேன். இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக்கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது என்றார்.