ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வடிவேலு நடித்த தெனாலிராமன் மற்றும் எலி ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
யுவராஜ் சொன்ன கதை பிடித்து தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டார் என்றாலும், தற்போது பாலிவுட்டில் அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக யுவராஜ் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டதாம். அதனாலேயே அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.