‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
வடிவேலு நடித்த தெனாலிராமன் மற்றும் எலி ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
யுவராஜ் சொன்ன கதை பிடித்து தான் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டார் என்றாலும், தற்போது பாலிவுட்டில் அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக யுவராஜ் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளையும் ஷாருக்கான் படத்திற்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டதாம். அதனாலேயே அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.