ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழில் வாய் மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். தற்போது தமிழில் ஹாய் சினாமிகா இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதோடு மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனவும் பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛விஜய்யின் நடனம் குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் விஜய்யின் ரசிகன். இதற்கு காரணம் அவரது நடனம்தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறேன். முக்கியமாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடி இருப்பார். அது அத்தனை எளிதான விசயமல்ல. என்னை பொருத்தவரை விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தெரிகிறார். அவரது நடனத்திற்கு எப்போதுமே நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் துல்கர் சல்மான்.