டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் 1970களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த கொள்ளையன் நாகேஸ்வரராவ். எந்த சிறையில் அடைக்கப்ட்டாலும் அங்கிருந்து எளிதாக தப்பி விடுவான். இதனால் அவன் டைகர் நாகேஸ்வரராவ் என்று அழைக்கப்பட்டான். அவன் பிறந்த ஸ்டூவர்ட்புரம் மக்கள் அவனால் நன்மையும் அடைந்தார்கள். துன்பமும் அடைந்தார்கள்.
டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை அதே பெயரில் தெலுங்கில் திரைப்படமாக தயாராகிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவாக நடிக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். வம்சி இயக்குகிறார். இதே டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை ஸ்டூவர்ட்புரம் டொங்கா என்ற பெயரிலும் தயாராகிறது. இதனை பெல்லம்கொண்டா சுரேஷ் இயக்க, பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார்.
இது ஆந்திர சினிமாவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகேஸ்வர ராவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அந்த உரையாடல்களின் அடிப்படையில் ஸ்கிரிப்டை எழுதியதாகவும், நாகேஸ்வரராவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாகவும், இதற்காக நான்கு ஆண்டுகள் உழைத்திருப்பதாகவும் வம்சி கூறியுள்ளார். நாகேஸ்வரராவின் வாழ்க்கையை படம் எடுக்கும் உரிமை எங்களிடமே உள்ளது என்று ஸ்டூவர்ட்புரம் டொங்கா படத் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.