இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணத்திற்கு பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் அப்பாவின் சார்பில் மகன் சரண் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சங்கராபரணம் படத்துக்கான முதல் தேசிய விருது முதல் பத்மவிபூஷன் வரை பெரும்பாலான விருதுகளை அரசாங்கத்திடம் இருந்து அப்பா பெற்றிருந்தார். அவர் விருதுகளை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அவர் தனது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டார், எந்தவொரு கலைஞருக்கும், அவர்களை ஊக்கப்படுத்த அங்கீகாரம் தேவை. தேசத்திலேயே மிக உயர்ந்த அங்கீகாரம் ஒன்றைக் காட்டிலும் சிறந்த கவுரவம் என்ன இருக்க முடியும்.
எங்கள் குடும்பத்தினரும், ரசிகர்களும் அப்பாவின் சாதனைகளைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறோமோ, அவ்வளவு துரதிர்ஷ்டவசமாக, அவர் அத்தகைய மரியாதையைப் பெறுவதற்கு முன்பே இறந்தார் என்பதில் கவலையும் கொள்கிறோம். அவரும் அவரது சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.