ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணத்திற்கு பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் அப்பாவின் சார்பில் மகன் சரண் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சங்கராபரணம் படத்துக்கான முதல் தேசிய விருது முதல் பத்மவிபூஷன் வரை பெரும்பாலான விருதுகளை அரசாங்கத்திடம் இருந்து அப்பா பெற்றிருந்தார். அவர் விருதுகளை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அவர் தனது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டார், எந்தவொரு கலைஞருக்கும், அவர்களை ஊக்கப்படுத்த அங்கீகாரம் தேவை. தேசத்திலேயே மிக உயர்ந்த அங்கீகாரம் ஒன்றைக் காட்டிலும் சிறந்த கவுரவம் என்ன இருக்க முடியும்.
எங்கள் குடும்பத்தினரும், ரசிகர்களும் அப்பாவின் சாதனைகளைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறோமோ, அவ்வளவு துரதிர்ஷ்டவசமாக, அவர் அத்தகைய மரியாதையைப் பெறுவதற்கு முன்பே இறந்தார் என்பதில் கவலையும் கொள்கிறோம். அவரும் அவரது சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.