'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணத்திற்கு பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் அப்பாவின் சார்பில் மகன் சரண் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சங்கராபரணம் படத்துக்கான முதல் தேசிய விருது முதல் பத்மவிபூஷன் வரை பெரும்பாலான விருதுகளை அரசாங்கத்திடம் இருந்து அப்பா பெற்றிருந்தார். அவர் விருதுகளை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அவர் தனது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டார், எந்தவொரு கலைஞருக்கும், அவர்களை ஊக்கப்படுத்த அங்கீகாரம் தேவை. தேசத்திலேயே மிக உயர்ந்த அங்கீகாரம் ஒன்றைக் காட்டிலும் சிறந்த கவுரவம் என்ன இருக்க முடியும்.
எங்கள் குடும்பத்தினரும், ரசிகர்களும் அப்பாவின் சாதனைகளைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறோமோ, அவ்வளவு துரதிர்ஷ்டவசமாக, அவர் அத்தகைய மரியாதையைப் பெறுவதற்கு முன்பே இறந்தார் என்பதில் கவலையும் கொள்கிறோம். அவரும் அவரது சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.