‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் |
தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமையன்று ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', விஷால் ஆர்யா நடித்த 'எனிமி' ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நேற்று வரை மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அதன் காரணமாக கடந்த ஐந்தாறு நாட்களாகவே தியேட்டர்களில் மக்களின் வருகை மிக மிகக் குறைவாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது. ஆனால், 'அண்ணாத்த' படத்தின் வசூல் 200 கோடி, 'எமினி' படத்தின் வசூல் 20 கோடி என சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக வசூல் நிலைமை மோசம் என்பதால் அவ்வளவு வசூல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
மழை வெள்ளத் தாக்கத்தால் மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் வருவதும் சந்தேகம். உண்மை நிலை இப்படியிருக்க படங்களின் வசூலை வேண்டுமென்றே உயர்த்திக் காட்ட 'டிராக்கர்கள்' என்ற போர்வையில் சிலர் செயல்பட்டு வருவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள்.