பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமையன்று ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', விஷால் ஆர்யா நடித்த 'எனிமி' ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நேற்று வரை மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அதன் காரணமாக கடந்த ஐந்தாறு நாட்களாகவே தியேட்டர்களில் மக்களின் வருகை மிக மிகக் குறைவாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது. ஆனால், 'அண்ணாத்த' படத்தின் வசூல் 200 கோடி, 'எமினி' படத்தின் வசூல் 20 கோடி என சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக வசூல் நிலைமை மோசம் என்பதால் அவ்வளவு வசூல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
மழை வெள்ளத் தாக்கத்தால் மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் வருவதும் சந்தேகம். உண்மை நிலை இப்படியிருக்க படங்களின் வசூலை வேண்டுமென்றே உயர்த்திக் காட்ட 'டிராக்கர்கள்' என்ற போர்வையில் சிலர் செயல்பட்டு வருவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள்.




