பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமையன்று ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', விஷால் ஆர்யா நடித்த 'எனிமி' ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் நேற்று வரை மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அதன் காரணமாக கடந்த ஐந்தாறு நாட்களாகவே தியேட்டர்களில் மக்களின் வருகை மிக மிகக் குறைவாக இருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது. ஆனால், 'அண்ணாத்த' படத்தின் வசூல் 200 கோடி, 'எமினி' படத்தின் வசூல் 20 கோடி என சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக வசூல் நிலைமை மோசம் என்பதால் அவ்வளவு வசூல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
மழை வெள்ளத் தாக்கத்தால் மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவில் வருவதும் சந்தேகம். உண்மை நிலை இப்படியிருக்க படங்களின் வசூலை வேண்டுமென்றே உயர்த்திக் காட்ட 'டிராக்கர்கள்' என்ற போர்வையில் சிலர் செயல்பட்டு வருவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள்.