வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

சென்னை : ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும் என நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்தப் படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சி உள்ளவர்களால் ஏற்க முடியாதது. தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். கேள்விகள் விபரம்:
இது உண்மை நிகழ்வு திரைப்படம் தானா?
* கொலையுண்ட பழங்குடி இளைஞர் பெயர் ராஜாக்கண்ணு. அவரை படுகொலை செய்த காவல் துறை அதிகாரி பெயர் அந்தோணிசாமி. ராஜாக்கண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் பெயர் சந்துரு. விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி.,யின் பெயர் பெருமாள்சாமி என உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டியுள்ளீர்கள். ஆனால், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மட்டும், அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன்; நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?
* ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில், ஊராட்சி தலைவரும், ஊர் மக்களும் தான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சி தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்? இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.




