25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) மறைவுக்கு 10 நாட்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த அக்., 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு திரண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ் நடிகர்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புனித் மறைந்த சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதனால் அப்போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. தற்போது குணமாகி வீட்டில் ஓய்வு பெற்று வரும் நிலையில் புனித் மறைவுக்கு ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி.
அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛நான் மருத்துவமனையில் இருந்தபோது புனித் அகால மரணம் அடைந்தார். அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு பின் தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும், பண்பும் கொண்ட அருமையான குழந்தை. புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்துவிட்டார். அவரது இழப்பை ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.