மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) மறைவுக்கு 10 நாட்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த அக்., 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு திரண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ் நடிகர்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புனித் மறைந்த சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதனால் அப்போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. தற்போது குணமாகி வீட்டில் ஓய்வு பெற்று வரும் நிலையில் புனித் மறைவுக்கு ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி.
அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛நான் மருத்துவமனையில் இருந்தபோது புனித் அகால மரணம் அடைந்தார். அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு பின் தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும், பண்பும் கொண்ட அருமையான குழந்தை. புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்துவிட்டார். அவரது இழப்பை ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.