காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

தெலுங்குத் திரையுலகத்தில் அதிரடி கதாநாயகன் எனப் பெயரெடுத்தவர் பாலகிருஷ்ணா. படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அடிக்கடி எதையாவது அதிரடியாகப் பேசி சர்ச்சையை இழுத்து விடுவார். சமீபத்தில் கூட ஏஆர் ரகுமான் பற்றி அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பாலகிருஷ்ணா 'ஆஹா' ஓடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில்' என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமா பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
தெலுங்கு நடிகர் நானி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாழ்க்கையில் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருப்பது எது என்பதற்கு பதிலளித்துள்ளார். அதில் தனது அப்பா என்டிஆர் படங்களும் தனது அபிமான பிராண்ட் ஆன 'சரக்கு' ஒன்றைப் பற்றியும் சொல்லி அவை போதும் எனக்கு கம்பெனி கொடுக்க என்று சொல்லியுள்ளார்.
சினிமா நடிகர்கள் தாங்கள் குடிப்பதைப் பற்றி பொதுவெளியில் பகிர மாட்டார்கள். ஆனால், பாலகிருஷ்ணா இப்படி பகிர்ந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.