ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் இருளர் இன மக்களின் வாழ்க்கை பற்றி பேசியது. இந்த படத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து போனார். இதை தொடர்ந்து சூர்யா, இருளர் இன மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்துவரும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார். இதற்கு சூர்யா தனது டுவிட்டரில் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில் எழுதியிருப்பதாவது: தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது.
மேலும் எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி, என பதிவிட்டுள்ளார்.




